கண்ணால் பேசிவிட்டாள்

கண்ணால் பேசிவிட்டாள்

என் உயிரை சாய்த்து விட்டாள்

கனவினை மாய்த்து விட்டாள்

என் உடலில் நுழைந்து விட்டாள்

என் உணர்வை பருகி விட்டாள்

உறக்கத்தை பிரித்து எடுத்தாள்

உஷ்ணத்தை ஏற்றி விட்டாள்

என் உதயத்தை தடுத்து விட்டாள்

என் இமயத்தை உடைத்து விட்டாள்

ஒரு நொடிக்குள் புகுந்து விட்டாள்

என் ஒரு ஒரு செல்லிலும் அமைந்துவிட்டாள்

கண்ணை பருகி விட்டாள்

இமைகளை பிரித்து எடுத்தாள்

அவள் பார்வைக்குள் என்னை செலுத்தி விட்டாள்

பொதுவாய் என்னை அழித்து விட்டாள்

காதலால் என்னை சபித்து விட்டாள்

காரணம் நான் கேட்டால் கண்ணால்

பேசிவிட்டாள்

எழுதியவர் : ருத்ரன் (22-Jun-10, 8:45 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 372

மேலே