நினைத்தாலே இனிக்கும்
70-80 ஆண்டுகளுக்குப் பிறகு
ஒரு மலரும் நினைவுகளை
ஒரு தாத்தா பேரனுக்கு
எழுதினால் எப்படியிருக்கும்?
ஒரு நகைச்சுவை (?) கவிதை(?)
==============================================================================================
அது அந்தக் காலம்-
கருத்தரித்த நாள் முதலாய்
மருத்துவம் பார்த்து
அனுதினம் ஸ்கேன் செய்து
வளர்த்தாள் என் மம்மி !
நியுமராலஜி பார்த்து
சிசேரியன் டெலிவரி ஆனேன் !
பிறந்த முப்பதாம் மாதமே
பள்ளிசெல்ல துவங்கிய எனக்கு
எல்கேஜியில் பதினைந்து கேஜி
புத்தகம் சுமந்த பழக்கமுண்டு !
மேத்சில் நூற்றுக்கு நூறு
வாங்கியபோது பக்கத்து
வீட்டு பிரதீப் நூற்று ஒன்று
எடுத்து என் மம்மி டாடி
புலம்பி அழுததாய் நினைவு !
தமிழ் அன்று தங்க்லீஷ் ஆக
வளரத் துவங்கிய காலம் !
இந்திய-பாக் கிரிக்கெட் போட்டி
இந்தியாவை வல்லரசாக்குமென
என் அண்ணன் போயெம் எழுதினான்!
வெறும் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல்
எனும் எரிபொருள் போட்டு ஒருநாள்
முழுக்க ஊர் சுற்ற முடிந்த காலமது !
ஒருமுறை ஸ்மார்ட் போன்
கேட்டதற்கு டாடி என்னை முறைத்துப்
பார்த்து வாங்கித் தந்த ஞாபகம்!
"டாடி மம்மி வீட்டில் இல்லே"
என்ற அந்தக் காலத்து பாட்டுப்போல்
அருமையான இசை இனிவருமா?
கேம்பஸ் எனும் நேர்முகத் தேர்வில்
ஒரு எம்மென்சி என்னைத் தெரிவு செய்ய
மம்மியும் டாடியும் புல்லரித்துப் போயினர்!
இரவை பகலாக்கி உழைத்த காலம் !
வார இறுதி டிஜே பார்ட்டிகளும்
மால் எனும் வணிக வளாகவுமாய்
எங்களது வாழ்க்கை ஆஹா...
அன்றெல்லாம் இருபது ரூபாயில்
ஒரு பாட்டில் குடிநீர் கிடைக்கும்!
வில்லேஜ் ஆட்கள் எல்லாம்
நெல்செடி எனும் ஒரு பிளான்ட்
வளர்க்க தண்ணீர் இல்லையென
போராட்டம் நடத்தியதை டிவி யில்
பார்த்து என் டாடி ஏன் குமுறினார்
என்பது இதுவரை புரியவில்லை !
மொபைல் வைத்து மறந்த இடம்
தேடக் கூட கூகிள் என்றவொரு
தளம் மட்டுமே இருந்த காலம்!
பேஸ் புக் எனும் முகநூல் வழி
நண்பர்கள் அளவளாவும் பழக்கம்!
அப்படித்தான் உன் க்ராண்ட்மாவை
பிக்-அப் செய்து கொண்டேன் !
முதலில் ஸ்டேட்ஸ்-ல் இருந்து
சேட் செய்வதாக கூறிய அவள்
பக்கத்து ஸ்ட்ரீட்டில் இருந்து
பேசியது பின்புதான் தெரிந்தது!
என்னதான் இருந்தாலும் -
அந்தக் காலத்து தூசும் புகையும்
மெக்டொனால்டில் பிட்சாவும்
கோக்கும் பர்கரும் பிங்கர்சிப்சும்
வாட்சப்பும் பேஸ் புக்கும்
இப்போதும் நினைத்தாலே இனிக்கும்!