முயற்சி கவி -மரபு

இன்று ,
கண்களாய் மாறியது
ஞாலத்தின் காலத்தைக்
கைக்குள் கொண்ட
அறிவியல்- ஓர் அதிசய வரமாய்...
போபால் ஹிரோஷிமா போதும் ?மீதி
பூகோளம் காப்போம் வாரும் .....
தோட்டங்கள் மறைந்தது
தோட்டாக்கள் வந்தது
எங்கோ செல்கிறோம் நாம் ??
கண்டங்கள் கூடி
அண்டங்கள் ஆளும்
அந்நாள் எங்கோ ???
ஆக்கப்பணியாற்று -அதில்
தாக்கும் நிலை மாற்று நீ ....
தாய்த்தந்தை மறவாதே,
தன்னலங்கருதாதே,
நாட்டுக்குழை
பன்நாட்டில்பெருமைசேர் ......
தாயகத்தில் கால்ஊன்றி
விண்ணகத்தில் விளையாடும்
வியக்கவைக்கும் விந்தைகளை-செய்வோரை
வந்தனை செய்வோம் வாரீர் !!!

எழுதியவர் : சுடர்விழி.இரா (23-Feb-15, 1:18 pm)
பார்வை : 213

மேலே