என் செல்லமே
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பு மகளே...
என் செல்லமே...
உன்னில் என்னைப் பார்க்கிறனேடி.!
நீ பிறந்ததும்
உன் ஶசிரிப்பே என் சிரிப்பாக.,
உன் சோகமே என் சோகமாக
மாறிப்போனதடி...!
என் கண்ணே...
பட்ட வலியும் வேதனையும்
உன் பொக்கை வாய் சிரிப்புக்குள்
ஓடி ஒளிந்து கொண்டதடி.!
என் மணியே ...
என் மார்பில் பால் அறுந்தும்போது
ஓராயிரம் பூ
உள்ளத்தில் பூத்ததடி.
ஊறும் மறந்ததடி,
உலகமும் மறந்ததடி..!
உற்றவனையும் மறந்து
என்னை நானே மறந்தேனடி...!
பொண்ணா பொறந்த பொறப்புக்கு
வேறென்ன வேண்டும்...?
கொண்டவனின் சுகம்
ஒரு காலம்தானடி,
பெற்றவளின் சுகம்
பிள்ளைகளின் நலம்தானடி...!
*********************************************