பாதை

என்னுடம்புக்குள்
இரவு வருவதற்குள்
இலக்கை அடையவேண்டும்

எங்கிருந்து வந்தேன்
என்பது
எனக்கு நினைவில்லை ..

வெறிச்சோடிய சாலையில்
மூவர் தனித்தனியே
நின்று கொண்டிருந்தார்கள்

ஒருவர் இரு கையும் தூக்கிக் கொண்டு
மேற்கு நோக்கியும்...
ஒருவர் மார்புக்கு குறுக்கே
அடையாளம் இட்டுக் கொண்டு
வடக்கு நோக்கியும் ..
ஒருவர் இருகை கூப்பிக்கொண்டு
கிழக்கு நோக்கியும்...

எவ்வழி சென்றால்
எனக்கான வீடு வருமென்று
யாரிடம் கேட்பது
....................................................
..............................................................
மின்னலாய்
மூவரையும் விலக்கி
அருகிருந்த பறவையிடம்
விசாரித்தேன்.
பாதை தெரிந்தது .!!!!!

எழுதியவர் : சுசீந்திரன். (28-Feb-15, 6:40 pm)
Tanglish : paathai
பார்வை : 103

மேலே