கலக்கம் கொள்ளாதே
இருளில் கலக்கம் கொள்ளாதே
அந்த இருளில்தான் நிலவும்
வீண்மீனும்,,உன்னை அலங்கரிக்கும்
கலங்கிய குளம் என்று
நீ கலங்காதே ..தெளிந்தால்
உனக்கு தாகம் வருகையில்
அதுவே தீர்த்தம் ஆகும்
கடல் ஆழம் என்று
கரையில் நிக்காதே
அறிவில் ஆழம் அளந்து
முத்தெடு
காற்று கண்ணுக்கு தெரியவில்லை
நான் குருடன் என்று நம்பிக்கை இழக்காதே
புல்லாங்குழல் இசையால் காற்றுக்கு நீ
உருவம் கொடு
உன்னோட விருப்பத்தில்
வியர்வை சிந்து ,சிந்து சமவெளி
காற்று பெறுவாய்
அலைகள் ஓடி ஓடி உழைப்பதனால் தான்
குளிர் காற்றை அவை வாங்குகின்றன
உழைப்பில் வரும் வியர்வை ....
தேவர்லோகத்து அமீர்தத்தை விட
உயர்வானது ,,