அம்மாவின் கைப்பிடி சோறு

எத்தனை முறை
தண்டித்திருப்பேன் என் மௌனத்தால்!
உன் நெஞ்சை எத்தனை
வார்த்தைகளால் பொசுக்கி இருப்பேன்
என் முன் கோபத்தால் !
இப்படி எத்தனை எத்தனை
செய்தும் இன்றும் தட்டை
தூக்கி கொண்டு என் பின்
ஓடி வருகிறாய் என்
வயிற்றை நிரப்பிட!
இப்படிப்பட்ட உனக்கு
என்ன பரிசு வேண்டும் என்று
கேட்டால் இப்பொழுதும்
ஒரு கை சாதம் எடுத்து
என் வாயில் ஊட்டி
இது போதும் என்று கூறி
நகைக்கிறாய்! இதையெல்லாம்
நீ எங்கு கற்று கொண்டாயோ
என்று நினைத்து நினைத்து
வியந்து கொண்டே இருக்கிறேன் நான்!

எழுதியவர் : இந்திராணி (3-Mar-15, 1:46 pm)
பார்வை : 535

மேலே