விழிகளை மட்டும் மூடு மானிடா

~~~~விழிகளை சில முறை
மூடிக் கொண்டு அலைந்து விடு
~~~~மானிடா ~~~~!

~~~~ உனையே பின் தொடர்கிறது
உளவுத் துறை போல
~~~~இளமையெனும் _ஒரு
உல்லாசக் கப்பல்
~~~~லேசான தென்றல் கொண்டு
வாழ்வின் விளிம்பில் இருக்கும் -உன்
~~~~பாதச் சுவட்டினை ஆழ் கடலில் சாய்க்க
காத்துக் கிடக்குது -பருவம் எனும்
~~~~காற்றை திசை மாறி வீசி
உன்னை சாகடிக்க சபதம் கொண்டு திரிகிறது

ஆட்டுப் பிழுக்கையும்
~~~~ நெற்கதிரின் தாள் போல
வயிறு நிறைய வைக்கும் வாசனையாய்
~~~~தரித்திரம் பிடித்து நீ அலைவதற்கு
சரித்திரம் படைக்கும்
~~~~~சடலமாய் நீ உலாவும் வரை
காதலித்துக் கொண்டுதான் இருக்கும் -உன்
~~~~உயிரை காவிக் கொண்டு

ஒவ்வொரு கணத்துக்கு கணம்
~~~~கண்ணீரும் விழி மடலை
சுற்றி வளைத்தாலும்
~~~~தென்னங் கீற்றில் வீற்றிருக்கும்
பச்சைக் கிளிபோல -காதலோடு
~~~~நிறமாய் நிழலாக கலந்து விடுவாய்
கலக்கும் இடம் களங்கம் இல்லாவிடில்
~~~~கவலை இல்லை தற்பொழுது

உன் ஒவ்வொரு வசனமும்
~~~~வாய்மைகளை மறைத்து
தினம் தினம் புலம்பும்
~~~~தேவாரமாய் காதல்
பெயரை கனிவாக சொல்லிச் சொல்லி
~~~~நெஞ்சத்தை தொடுவானத்தில் தொலைத்தபடி

மடிதவழும் குழந்தையின்
~~~~மலமும் மார்கழிப் பூவாய் -மனதினில்
சூடிக் கொள்ள ஆசைப்படுவாய்
~~~~வாகை சூடிய வீரர் போல
உன்னை நினைத்து அழிந்து போகும்
~~~நேரங்களில் தான்
மாற்றிக் கொள்வாய் -மனம்
~~~~எனும் சாக்கடையில் காதல்
எனும் ஒரு கைக்குட்டை
~~~~கொச்சை நாற்றத்தோடு
நாறிப்போகும் -உன்
~~~~கரம் பற்றி வலம் வரும் துணை
உன்னை மறந்து -சுற்றிப் போவர்
~~~~இடது கரத்தில் தன் துணையை
அழைத்துக் கொண்டும்
~~~~விரல் நுனியில் உன்
மழலையையும் தாங்கிய வண்ணம் ...............

எழுதியவர் : கீர்த்தனா (3-Mar-15, 11:02 pm)
பார்வை : 142

மேலே