மலர்ந்து மனம் வீசி

மலர்ந்து மணம் வீசி
பலர் மனதை கவரும்
மலர்களுக்கு ஆயுள்
ஒருநாளே!
எனினும் அவை மலர்ந்திட
மறுப்பதில்லை
அதன் வாழ்க்கையை வெறுப்பதில்லை!
மலரினும் மென்மையான
மனித மனமே
நீ செல்லும் பாதைகள்
கடினம் தான்
பாதங்கள் சோர்ந்தால்
இளைப்பாற பல நிழல்கள் உண்டு,
இதம் தந்த நிழலிடம்
பிரிவு ஏற்றால் தான்
உன் பயணம் தொடரும்...
பாதைகள் மாறலாம்
பருவங்கள் ஓடலாம்
ஆனால் உன்
பயணம் முடிவதில்லை
தோல்வி எனும் முள்
தைத்தால்தானே வெற்றியாகும்
புற்களின் மென்மையை
உணர முடியும்!
கண்களை மூடி வெளிச்சத்தை
கானல் என்பதில் அர்த்தமென்ன
நின்றால் வானம் முட்டும்
என்பது முட்டாள் பேச்சு
சோதனைகள் உன்
சாதனைக்கான சந்தர்ப்பம்
கண்ணீர் விட்டு
மூலையில் முடங்கினால்
வாழ்க்கையே உனக்கு பெருந்துக்கம்
காலையில் சுடர்விடும்
சூரியன் போல் உனக்கான
தனித்துவம் காட்டு
மாலையில் மயக்கிடும்
சந்திரனாய் பொறுமையை காத்து
கோபத்தை பூட்டு
அன்பை ஆயுதமாய்
தோழமையை தோழனாய்
வாழ்க்கையை வைரமாய்
கொண்டு வாழ்ந்து காட்டு!....

எழுதியவர் : இந்திராணி (4-Mar-15, 3:04 pm)
பார்வை : 74

மேலே