கண்ணீர்

கண்ணீர்...!
ஆன்மாவின் அமுதவூற்று..!
அறிவின் ஜீவநதி..!
ஆத்திரத்தின் திராவகம்..!
ஆனந்தத்தின் பூந்தேன்..!
பிரிவின் பாதையில்
பேசும் ஓவியம்..!
பிரிந்தோர் கூடிடில்
பேசா காவியம்..!
வென்று தோற்றிடில்
திராவகத் தேன்..!
தோற்று வெல்கையில்
சுடுநீர் ஓத்தடம்..!
இது -
சங்கடங்களின்
சாந்தகளுக்கேற்ப...
சலனபடும் சங்கீத அருவி..!