-------- மனிதம் வெல்லும்-------

(( தளத்தில் அனைத்து தோழமைகளுக்கும் நலம் என்று நம்புகிறேன்))


------- மனிதம் வெல்லும்-------

எங்கும் தெரிவது புகை மட்டும் தான்
நான் மட்டும் எதற்கு சுற்ற வேண்டும் என்று
பூமியும் நின்றுவிட்டது போல..

காற்றில் பறப்பதற்கு அங்கே இலைகள் இல்லை
மரங்களின் பதினாறாம் நாள் என்றோ
கொண்டாடப்பட்டு விட்டது..

பறப்பது சிகப்பு நிற பக்கங்கள்
கீதையிலிருந்தும்
குரானிலிருந்தும்
விவிலியத்திலிருந்தும்
ஒன்றை ஒன்று முட்டி மோதி
பறக்கின்றன
மீதமிருக்கும் மனிதனிடம்
தான்தான் கருத்தை முதலில் சொல்லவேண்டும்
என்ற வெறியுடன்..

அவன் அறிந்திருக்கவில்லை
இல்லை
அறிவிக்கவில்லை

தான் உருவாக்கியதே
தன்னை அழிக்கும் என்று

விலங்கிலிருந்து மனிதனாக மாற
அவனே உருவாக்கினான் - அன்று
மனிதனிலிருந்து விலங்காய் மாற்றி
அதுவே கொல்கிறது - இன்று

புல்லாங்குழலின் துளைகளிலும்
குருதி நிரம்பி விட்டது

தான்தான் புவியில் இறக்கப்போகும்
கடைசி மனிதன் என்று அறியாமல்
அருகில் கிடக்கும் பிணத்தின்
முதுகில் செந்நிறத்தில் எழுதுகிறான் அவன்
""மனிதம் வெல்லும்""


(பி:கு : ISIS என்ற பயங்கிறவாதிகள் ((( தீவிரவாதி என்பது வேறு))) மகனை கொன்று சமைத்து தேடி சென்ற தாய்க்கு சாப்பிட கொடுத்துள்ளனர் அவரும் அறியாமல் அதை சாப்பிட்டு உள்ளார்..... நேற்றிரவு இந்த செய்தியை படித்த பின்பு ஏற்ப்பட்ட கோபத்திறக்கும் , வேதனைக்கும் , உளைச்சலுக்கும் வடிகாலாய் பல நாள்களுக்கு பின் தானாக வந்த எழுத்துக்கள் இல்லை எண்ணங்கள்...

எதிர்மறையான கருத்துக்களை உள்ளே வைத்து தலைப்பு மட்டும் நேர்மறையாக வைக்க காரணம் நம்பிக்கை தான் ... சாகும் போது ""மனிதம் வெல்லும்"" என்று எழுதிய அவனின் அதே நம்பிக்கை )

எழுதியவர் : ச.ஷர்மா (5-Mar-15, 10:41 am)
பார்வை : 180

மேலே