உலக மகளிர் தினம்

(அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்)

இறைவன்
மண்ணிலிருந்து
மனிதனை படைத்தான்
பெண்ணிலிருந்தே
அன்பிற்கே
விளக்கம் அளித்தான்!

கருவறையில்
நம்மை சுமந்து
அன்பிற்கே
விதை விதைத்தவள்
அன்னை!

தந்தை
வாங்கி வந்த
ஒற்றை பொம்மையையும்
தாரளமாக விட்டுகொடுத்தவள்
சகோதரி!

அவள் மடியில்
அழகாய் தலைசாய்த்து
நீதி கதை பல கூறி
நேர்மையாய்
வாழ துண்டியவள்
பாட்டி!

மனதில் இருந்த
பாரங்களையெல்லாம்
ஓரமாய்
தூக்கி எறிய வைத்தவள்
மனைவி!

புகுந்த வீடு
சென்றாலும்
பிறந்த வீட்டு நினைவு
என்றும் மாறாதவள்
மகள் !

இப்படி
நம் வாழ்கையின்
ஒவ்வொரு அசைவிலும்
இன்னிசை ஒலிப்பவர்கள்
பெண்கள்தான்
வாழ்கையின் கண்கள்தான் !

பெயரளவில் இல்லாமல்
பேரளவில் வளர்ந்து
இமயத்தையும் கடந்து
சாதித்தவர்கள்
பெண்களும்தான்
இந்நாட்டின்
தூண்களும்தான் !

இறைவன்
பொறுமையால்
படைத்ததனால்
சில நாய்கள்
கற்பை சிறுமை
படுத்துகிறார்கள்

நிறுத்திக்கொள்ளுங்கள்
பொறுமையாய்
இருக்கும் கடல் போல
அவர்களை
நினைத்து விட வேண்டாம் !

அநியாங்கள்
தொடர்ந்து கொண்டே இருந்தால்
சுனமியாகவும் உருவெடுக்க
தெரியும்!
அப்போதே அவர்கள் பலம்
புரியும்!

பெண்மையை போற்றுவோம்
ஜனநாயகத்தை பறைசாற்றுவோம்!

எழுதியவர் : கவிபுத்திரன் (8-Mar-15, 10:51 am)
பார்வை : 423

மேலே