என் ஆசை துடிப்பு

கட்டித் தங்கமே நீ என்
செல்லக் குட்டிதான்.

வெட்டி எடுத்தேன் விழி
வாள் கொண்டு தான்.

வட்டி கொடுப்பேன் என்
இதழ் கொண்டு தான்.

முத்தாரமாகப் பதிப்பேன்
நான் முத்தம் கொண்டு தான்.

என் கண் வியக்க ரசிப்பேன்
உன் முகம் மட்டுந்தான்.

தாரை வார்த்து மாமன்
கொடுத்த பின்னே.

இடை தொட தடை ஏதடா
என் செல்லக்குட்டி.

கட்டிக்கிட்ட பின்னே
நான் உன் சக்கரைக் கட்டி.

விரட்டி அடிக்க மாட்டேன்
நீ என் இதயத் துடிப்பு.

வாட்டி வதைக்கின்றதே
உன் நினைப்பு.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (8-Mar-15, 12:47 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 108

மேலே