மடமையைக் கொளுத்து - சுடர்

அகிலத்திற்கே அன்பை
பறைசாற்ற ஆண்டவனின்
அற்புதப்படைப்பு பெண்ணே நீ !!!
அறியாமை இருளுக்குள்
அமிழ்ந்தது போதும் விழித்தெழு !!
வந்துபோகும் மேடு பள்ளம் கண்டு
தயங்காதே ...
இப்பாரினிலே ,,
தோல்வியும் வலிகளும்
உனக்கு மட்டும் சொந்தமில்லை......
நெஞ்சுக்குள் சுமக்கும்
வலிகளையெல்லாம்
தன்னம்பிக்கை விதையாக்கு
தரணியில் போற்றப்படுவாய்!!!
நொடிபொழுதும் அயராதே!!
ஒருநாள் ,,
உன் முயற்சிகள் யாவும்
முத்துமாலையாகும்....
உன் பயிற்சிகள் யாவும்
பாமாலையாகும் ...
அடுப்பூதிய பெண்ணாய்
அலங்கரிக்கப்பட்டது போதும்
அவமானம் துடைத்தெழு!!
அகங்காரம்,ஆணவம் அழித்துவிடு ...
மடமையைக் கொளுத்து
மா விதி செய்யப் புறப்படு !!!
அண்ணனும் தம்பியுமாய்
ஆயிரமாயிர உறவுகள்
உனக்கு துணைக்கொள்ள
காத்துக்கிடக்கிறது .....
துணிச்சலை துடுப்பாக்கி
தன்னம்பிக்கையை சிறகாக்கிப்பற
செவ்வாய் கிரகத்தையும் தாண்டி சாதிக்கலாம் .......


********************இரா.சுடர்விழி*****************************

எழுதியவர் : சுடர்விழி.இரா (8-Mar-15, 4:16 pm)
பார்வை : 346

சிறந்த கவிதைகள்

மேலே