நிஜங்களில்---நீ =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

''நீ''
நீ ...யாக
இரு ..!

நிஜங்களுக்கு
நிழல்களின்
அறிமுகம்
அவசியமற்றது ...

உலகினுக்கு
உன் வருகையின்
நோக்கம்
அறி ...

பிறந்து
இறப்பதென்றால்
மனிதப் பிறவியாய்
ஏன்...?

இளைஞனே ...

இருளினை
கிழித்துவந்த
புனித ஒளி
நீ ...

இதயத்தை
வருடிவிடும்
இனிய இசை
நீ...

சுதேசி
சுவாசித்த
சுத்தக்காற்று
நீ ...

சுயமாய்
எரியும்
ஜோதிச்சுடர்
நீ ...

உழைக்கும்
வர்க்கத்தின்
வியர்வைத்துளி
நீ ...

உதிரத்தில்
ஓடும்
உணர்வுத்தீ
நீ ...


நீ ..!
பயணிக்கும்
பாதைகள்
பரிசுத்தமாக
இருப்பதில்லை
எப்போதும் ...

முட்களும் ...
பூக்களும் ...
பூமியில்
சமமாய்த்தான்

பாதங்களை
பக்குவப்படுத்து ...

'காயங்கள்
ஆறிவிட்டால் '
தழும்புகள்
தருவதில்லை
வலிகளை...

அனுபவங்கள்
அள்ளித்தரும்
ஆச்சரியங்களில்
மூழ்கி ...எழு ...

அளவில்லா
ஆற்றலாய்
உன்னுள் ...நீ
'உரு'மாறு ...

உந்தன்
சாதனைக்காக
சரித்திரத்தின்
பக்கங்கள்
காத்திருக்கின்றன ...

தளர்ச்சிகள் ...விடு
முயற்சிகள் ...எடு
எண்ணங்கள் ...குவி
வண்ணங்கள் ...படை

ஆனாலும்

நீ ...
நீயாக
இரு ...

நிஜங்களுக்கு
நிழல்களின்
அறிமுகம்
அவசியமற்றது
-------------------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (8-Mar-15, 12:24 am)
பார்வை : 452

சிறந்த கவிதைகள்

மேலே