தாய்மையின் அங்கீகாரம்

சித்திரையில் சிரிப்பை உதிர்த்தவளே
வைகாசியில் ராசியானவளே
ஆனியில் தேனியாய் பறந்தவளே
ஆடியில் தேடி வந்தவளே
ஆவணியில் தாவணியில் சுற்றியவளே
புரட்டாசியில் புலம்பி தவித்தவளே
ஐப்பசியில் பேசி பழகியவளே
கார்த்திகையில் காதல் பயின்றவளே
மார்கழியில் மாக்கோலம் இட்டவளே
தையில் காதை கடித்தவளே
மாசியில் மாடிப்படி ஏறியவளே
பங்குனியில் பனிக்குடம் சுமந்தவளே

எழுதியவர் : கவியாருமுகம் (8-Mar-15, 5:21 pm)
பார்வை : 258

சிறந்த கவிதைகள்

மேலே