சகோதரனே

என் வீட்டை விட்டு
நானாக இல்லாமல் வெளியேறிய தருணம்
புதிதாக நுழைந்த இல்லம்
அங்கு நான் நுழைந்ததும்
என் கண்ணில் ஏனோ
கண்ணீர் துளி
அதில் எனக்கு தெரிந்தது
சிறு சிறு சண்டைகள்
அதில் சிறு கீறல்கள்
சிறு சிறு கண்ணீர் துளி
அதில் சிறு நினைவுகள்
அந்த நினைவுக்குள் ஒரு சந்தோசம்
எட்டி பார்த்தது சிறு புன்னகை
இதை எனக்கு கொடுத்த
கடவுள் தந்த அழகிய
பரிசே....
என் உயிர் சகோதரனே........

எழுதியவர் : ரா. பிரவீனா கிருஷ்ணன் (10-Mar-15, 9:54 am)
பார்வை : 926

மேலே