வானுறை வீடு

அந்தி வானம் மறைகிறது
அழகு மேகத் தேரில்;
அதில் அடைக்கலமான
ஆயிரமாயிரம் நீர்த்துளிகளும்
ஆனந்தமாய் எட்டிப்பார்க்கிறது,
அழகுப் புவி ஏட்டில்.

கவலை மறந்து
இரசிக்கச் சொல்லி,
கலகலப்பாய் சிரித்துச் செல்கிறது
இரதமென்னும் வாய்க்காலில்.

பலன் நூறு தந்துவிட்டு
பௌவியமாய்ப் பதுங்குகிறது
தன் வானுறை வீட்டில்...

எழுதியவர் : பபியோலா (15-Mar-15, 7:19 pm)
பார்வை : 233

சிறந்த கவிதைகள்

மேலே