சமுதாய கிறுக்கல்கள் -யாழ்மொழி

மருதமும் பாலையும்
ஒன்றானது இன்று
வறண்ட வானிலையால ..

எதிர்காலத்தில்
எரிபொருள் விற்பவன் ஆண்டியாவன்
குடிநீர் விற்பவன் அரசனாவான் .

குடித்தே திரியும்
ஏழையின் வீட்டில் அடுப்பைத்
தவிர அனைத்தும் எரிகிறது -அவன்
குடலும் சேர்ந்து எரிகிறது .

தின்றுக் கொழுத்தவன்
நடந்து செரிக்கிறான் -உண்ண
உணவின்றி உழுதவன் நடக்காமல்
கிடக்கிறான் ....

பனிக்கூழ் கேட்டு பிடிவாதம்
பிடிக்கிறது மாடிவீட்டு மழலை
பனியில் கிடந்தே சளியால்
துடிக்கிறது வீடற்ற குழவி ...

தொடரும் ..

எழுதியவர் : யாழ்மொழி (20-Mar-15, 3:23 pm)
பார்வை : 413

மேலே