சொல்லிலா மௌனத்தில்

மெல்லவீசும் மென்காற்று மேற்குவானில் வெண்ணிலவு
மெல்லிய கூந்தலில் மல்லிகைக்கு கொண்டாட்டம்
சொல்லிலா மௌனத்தில் செந்நிறப் பூவிதழ்
சொல்லாமல் நிற்பதேன் செந்தமிழ் நற்கவிஞா
சொல்அல்லி கேட்குது பார்

---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (12-Apr-25, 7:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே