உலரா பனித்துளி உரைக்கின்றேன்

மலரின் மேனியிலே படிந்திட்டேன்
உலரா பனித்துளி உரைக்கின்றேன் !
அழகின் ஈர்ப்பாலே வீழ்ந்திட்டேன்
அடியேன் காதலால் நானுந்தான் !

மலரெனும் மங்கை அவளின்
​மடியெனும் இதழில் அமர்ந்தேன் !
சுமையிலா எனையும் தாங்கியே
சுகத்தையும் தந்ததால் தன்னாலே !

வாசம்தான் இழுத்ததா எனையிங்கே
பாசம்தான் இதயத்தின் மூலையிலா !
சொற்பம்தான் வாழும் நேரமெனக்கு
அற்பம்தான் ஆசையும் அதற்குள்ளாக !

மனிதனின் வாழ்வும் அப்படித்தானே
மறையும் நேரம் அறியாதவன்தானே !
அளவிலா ஆசைகள் சேர்க்கின்றானே
அடைந்திடும் காலத்துள் இறக்கிறானே !

அழகு ஒன்றுமட்டும் தகுதியல்லவே
அகத்தை கொண்டு முடிவெடுங்கள் !
அன்னை தந்தையை கலந்திடுங்கள்
அகிலத்தில் இன்பமாய் வாழ்ந்திடுங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Mar-15, 7:20 am)
பார்வை : 156

மேலே