ஒரு வரி திகில் கதை -2

ஒரு நாள் ஒரு மனிதன் மன்னிப்புக்
கோரி தேவாலயத்திற்கு வந்தான்.

"பாதர்....நான் பெரிய பாவம் செய்து
விட்டேன் மன்னிப்பு கிடைக்குமா?"
சொல் மகனே,என்ன பாவம் செய்தாய்?

பாதர்,நம் நாட்டுப் போரின் போது
ஒருவனுக்கு வீட்டில் ஒளிந்துக்
கொள்ள இடம் கொடுத்து விட்டேன்.
இதொன்றும் பாவமில்லை,நீ போகலாம்.

பாதர்.அவனிடம் ஒளிந்து கொள்ள
ஒரு நாளைக்கு 200ரூபாய் வாங்கி
விட்டேன்.

இது பாவம் தானென்றாலும் அவனைக்
காப்பாற்றத்தானே அவ்வாறு செய்தாய்,
உன் பாவம் மன்னிக்கப்பட்டது.

இப்பத் தான் என் மனம் அமைதியடைந்தது.
இன்னுமொரு கேள்வி
சொல் மகனே,
போர் முடிந்து விட்டதென்று அவனிடம்
சொல்லி விடவா?
பாதர்:???????????

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (27-Mar-15, 11:50 am)
பார்வை : 772

சிறந்த நகைச்சுவைகள்

மேலே