முதுமை காதல்
பார்த்த முதல் நாளில்
இதயம் பறிபோகவில்லை
பஞ்சும் நெருப்பும் என
பற்றிக் கொள்ளவும் இல்லை
பஞ்சம் பிழைக்க வந்தேன்
தஞ்சம் நீ கொடுத்தாய்
தாரம் எனும் வரம் கொடுத்து
தாயாக மாற்றி வைத்தாய் .
தரணியில் சேய் வாழ தன்னையே
அர்பணித்தாய்
சுயநலம் கொண்டவர்கள் துரத்தி
ஒதுக்கிவிட
தோழனாய் தோள் கொடுத்தாய்
சுகமாய் சுமந்து கொண்டாய்.
காமமற்ற காதலினை காலம் கடந்து கற்றுக் கொண்டேன் .
தள்ளாடி நடந்தேன் தாங்கிப் பிடித்தாய்
சோர்ந்து நின்றேன் தலைகோதி
புத்துணர்வு தந்தாய் .
போதும் பதியே
போகும் நேரம் நெருங்குகின்றது
உன் நெஞ்சோடு என்னை அணைத்துக்கொள்
இந்த நிலையில்லா உலகில்
என்னை நிஜமாய் நேசித்தவன்
நீ மட்டுமே ...!!!