காதல் ஒரு விருட்சம்

கவிதைக்கு வித்திட்டவன் காதலன்
கவிதைக்கு நீர் ஊற்றி வளர்த்தவன் கவிஞன்
கவிதையும் காதலும் ஒரு விருட்சம்
காதல் எனும் வேர் காய்ந்து விட்டால்
கவிதை எனும் மரம் சாய்ந்து விடும்
ஒன்றினால் ஓன்று உருவாகுது
ஒன்றிற்குள் ஒன்றாக கருவாகுது
கருவாகும் மொட்டு மலராகி
காதல் எனும் குழந்தை உருவாகிறது
கவிதையே காதலுக்கு ஊட்டம்
கவிதை எழுதத் தெரிந்தவனுக்கு
காதல் வருவதும் அதைத் தக்க வைப்பதும் சுலபம்
கவிஞன் வாழ்க, கவிதை எழுத, காதல் வாழ்க

எழுதியவர் : பாத்திமா மலர் (30-Mar-15, 1:16 pm)
பார்வை : 78

மேலே