விடியல் தேடுகிறேன் - அலமு
எனைப்பார்த்து அழுத படியே புகைகிறது
என் வீட்டு விறகடுப்பும் ஊதுகுழலும்....!!
என் நடைபாதையில்இன்றளவும்
பூத்துக்குலுங்கி
முள்ளாய் விழுகிறது முகாரிப்பூக்கள்....
கண்ணீர்களில் கூட
தண்ணீர் ரில்லை....
பாவம் எனது கண்கள்.....!!
காதலிக்க வந்தவன்
வாழ வைக்க வந்ததில்லை...!!
என்னை கை பிடிக்க வத்தவன்
கண்ணீர் துடைக்க
வந்ததில்லை.....!!!
கூலி கொடுக்க வந்தவன்
தாலி கொடுக்க வந்ததில்லை...!!
கண் ணிரண்டு கெட்டவர்
கண்ணியமாய் வாழ்கின்றார்...!!
கண் ணிருந்தும் கெட்டவன்
கண்ணியத்தை மேய்கின்றான்.....!!