என் தோழன்

முதல் முதலாய் நான் கைகோர்த்து
நடக்க ஆசைப்பட்டவன் நீ!

நான் அழும்போதும் துவண்டுபோகும் போதும்
ஆறுதலாய் தோள் கொடுத்தவன் நீ!

என் சந்தோஷத்திற்காக உன் கஷ்டங்களை மறைத்து என்னை ஓர்
இளவரசி போன்று பார்த்துக்கொண்டவன் நீ!

என்னை பெற்றவள் இறந்து போனாள்
பெறாமலே தாயாக மாறியவன் நீ!

எனக்காக நீ செய்த தியாகங்களோ பல! உன் பாசத்தை என்னவென்று கூற!

நீ மனிதன் அல்ல , கடவுள் எனக்கு தந்த பொக்கிஷம்...

நீயே எனது ஹீரோ!!
நீயே எனது தோழன்!!

என்றும் உன்னை நேசிப்பேன் அப்பா!!!!!

எழுதியவர் : நந்தினி மோகனமுருகன் (4-Apr-15, 7:44 pm)
Tanglish : en thozhan
பார்வை : 206

மேலே