என்னவளே
காற்றிலசைந்த மலர்
நீ மெல்ல அசைத்த இதழ்
மூங்கில் துளை கண்ட காற்று உன்
மூச்சாய் வெளியேறும் இசையூற்று
சிப்பியில் அடைபட்ட ஒன்று நீ
சிரிக்க வெளிபட்டது நன்று
ரகசியம் கொண்ட இரு கவிதை
படிக்க தடையிட்டது அந்த ரவிக்கை
நூலை தோற்கடிக்கும் மெல் இடை
நூலிலும் சொல்லாதது உன் நடை
அழகின் இலக்கணங்கள் இனி
மாற்றம் கொள்ளும்
அழகென்றால் இனி நீ என
நிலவும் சொல்லும்
என்னவளே

