நான் அனாதை தான்
பக்கத்து வீட்டுப் பிள்ளை பாசமாய் நிலாச்சோறு சாப்பிடும் வேளையில், சிரிக்கும் நிலாவைப் பார்த்து கொஞ்சம் வெறுக்கும் என் உதடுகள்.....
நான் அனாதை தான்....
ஏன் பிறந்தாய் எனக் கேட்கும் வேளைகளில் ஏளனமாய் சிரிப்பை உதிர்த்துவிட்டு ஏங்கி தவிக்கும் என் மனசு....
நான் அனாதை தான்....
ஆசைகள் துறந்த வாழ்வினில் மீசையை முறுக்கும் முன்கோபிக்கு வாக்கு படும் வேதனை என் வாழ்வு....
நான் அனாதை தான்....
வேண்டா வேளைகளில் விலகி நின்று அழகு பார்க்கும் என் நட்புவட்டம்....
நான் அனாதை தான்...
முகம் தெரியா முகவரி அனாதை என்ற பெயரில் தந்த ஆண்டவன்...
அன்பை மட்டும் முழுமையான மன அடையாளமாய் தந்தது ஏனோ?????