தமிழுடன் வாழட்டும் தலைமுறை

பிறந்து ஐந்து வருடம் வரை
சுதந்திரமாய் சுற்றி திரிந்து
சுகமாய் ஊர்சுற்றி
இனிதே பள்ளி அறையில் வைத்த முதல் அடி
கசப்பாநதாய் இருந்தாலும்
இன்று இனிக்கிறது மலரும் நினைவுகளாய்.....

இன்றோ குழந்தை பருவ குறும்புகளைக்கூட
செய்யவிடாமல் பிறந்த அன்றே
பிறப்பு சான்றிதழும் பள்ளி சேர்க்க விண்ணப்பமும் வரிசைகட்டுகிறது.......

அ என்றால் அம்மா
என்று கற்பித்த காலங்கள் இன்று
ஏட்டளவில்கூட இல்லை
எப்படி வரும் தமிழ்வாசம்......

பிள்ளைகள் தயார்தான் தாய்மொழியில் தவழ
ஏனோ அடுத்தவன் மொழியில் அடிமையாக்குவதிலே
நோக்கமாய் பெற்றோர்.......

வளரட்டும் நம் தலைமுறை தமிழுடன்
எவன் சொன்னது அடுத்தவன் மொழிமட்டுமே சோறு போடும் என்று
உலகத்து உயிர்களுக்கு சோறுபோட்டவன் தமிழன் என்பதை மறந்து பேசாதீர்........


ரேவதி.......

எழுதியவர் : ரேவதி (13-Apr-15, 3:40 pm)
சேர்த்தது : ரேவதி
பார்வை : 86

மேலே