உன்னுருவினில் வந்து
உன் கருஞ்சிகை கண்டு
காதல் கொண்டு கவி பேசிய
என் இதழ்கள்....இன்று
நீ என்னை மறந்துவிடு
என்றும்..
வேறு ஒருத்திக்காக இனி
உன்னிதயம் திறந்துவிடு
என்றும்..
சொல்லிச் சென்ற பின்பு...!!
வெண்புகை கொண்டு
சில சுருள் துண்டு
கவி பேசுதடி..
என்னை மறந்த காதலே
அப்புகைக்கூட உன்னைதான்
இன்றும் நினைவுபடுத்துதடி
"உன்னுருவினில் வந்து"...
செ.மணி