தூரிகையின் தூவல்கள்

புதிதாய் கட்டிய
வீட்டில்
அறைகள் ஒதுக்கப்படுகிறது
- தேன் கூடு

-------------------------------------------

இங்கு குளித்தால்
எந்த பாவமும் நீங்கும்
எங்கு நான் குளிக்க
என் பாவம் நீங்க
- கங்கை

------------------------------------

கல் தெய்வமானது
தெய்வம் கல்லானது

--------------------------------------

யார் நெய்த வரம்
முதிர்மரம் கையில்
பூக் கூடை

-----------------------------------

கதர் சட்டையில்
சுத்தமாய் தலைவர்
அசுத்தமாய் தொகுதி

--------------------------------------

மேகப் போர்வையை
சரியாக உலர்த்தவில்லையோ
தூரிக் கொண்டிருக்கிறது

-------------------------------------------

நிலவுக் காட்சியில்
நட்சத்திர கலாட்டா

-----------------------------------------

தந்தியில் வந்தார்
மறக்கப்பட்ட அப்பா
மரணித்தவராய்

------------------------------------------

இருகோடு நோட்டு வாங்க
திருவோடு வாங்கினான்
ஏழை சிறுவன்

-----------------------------------------

கூழ் ஊத்த மறுத்தவர்கள்
வரிசையில் நின்று
பால் ஊத்துகிறார்கள்
மரணப் படுக்கையில் கொல்லப்பட்ட தாய்

--------------------------------------------------

காவல் ஏற்பாடுகள் பலம்
அன்று
கோவிலில் அன்னதானம்

-----------------------------------------------------

பிரிந்த பிறகும்
முகம் விரிந்தே இருப்பது
பூக்களுக்கு மட்டும் தான்

---------------------------------------------------------

என்னை களங்கப்படுத்தாதீர்கள்
கால்களை பிடித்து
மன்றாடிப் போகிறது கடல்

-------------------------------------------------

இரவு பகலாய் எரிந்தும்
தீராத விளக்கு
சூரியன்

-------------------------------------------------------

இரவில் மட்டும்
இறவல் போகும்
மாதுக் கிண்ணம் அவள்

---------------------------------------------------

தடுமாறும் வாழ்க்கையில்
தடுமாறுது உடை

--------------------------------------------------

இருப்பவனுக்கு
பசி ருசி அறியாது
இல்லாதவனுக்கு
பசி பசி அறியாது

-------------------------------------------------

எழுதியவர் : Raymond (14-Apr-15, 1:21 pm)
பார்வை : 105

மேலே