அன்பு

ஒரு புகைப்படம் பார்த்ததும்
என் கண்ணில் ஏனோ
கண்ணீர்..........!!!!

ஏன் என எண்ணி
பார்த்தேன் அது என்
நட்பின் அடையாளம்.........!!!!!

அதை கண்டவுடன்
ஏனோ என் நினைவுகள்
பின்னோக்கி நகர்ந்தன........!!!!!

புழுதி படிந்த இடங்களில்
ஒன்றாய் விளையாடிய
நாட்கள் எத்தனை......

சாலையோரம் கைகோர்த்து
நடை பழகிய
நாட்கள் எத்தனை...........

ஒன்றாய் வண்டியில்
ஊர் சுற்றிய
நாட்கள் எத்தனை.........

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
நாம் சந்தோசத்தால் திளைத்த
நாட்கள் எத்தனை..........

ஆனால்..........
காலம் என்னும்
சூழலில் சிக்கி
ஆளுக்கொரு திசையில்
சிறகாய் பறந்து கொண்டிருக்கிறோம்.........

நாம் எங்கே இருந்தாலும்
நீ தந்த அந்த
நேசத்தில் நம்
நினைவுகளை
நினைத்துப் பார்க்கிறேன்...........!!!!!!

சோகம் மறந்து
நேரம் மறந்து
சந்தோஷத்தில் திளைக்க.....!!!!!!!!!
என்றாவது ஒரு நாள்
மீண்டும் அந்த நாட்கள்
நம் வாழ்வில் மலராதா
என்று நினைகின்றேன்........!!!!!!!!

நம் சந்திப்பை எதிர்நோக்கி
காத்திருக்கிறேன்........
நம் மலரும் நினைவுகளை
நினைத்தபடி.......!!!!!!!!!!!!

எழுதியவர் : ரா. பிரவீனா கிருஷ்ணன் (18-Apr-15, 3:14 pm)
Tanglish : anbu
பார்வை : 313

மேலே