நம்புகிறார்கள்

வாசனைப் பூச்சிட்டால்
வந்திடுவாள் பின் என்றும்
பத்து ரூபாய் மிட்டாய்க்கு
பனிமலையில் புறள் வாளென்றும்
சக்கரைத் தண்ணீர் குடித்து
சாகசங்கள் செய்வாறென்றும்
பல் துலக்கி ஊதினாலே
பாவையவள் வீழ்வாளென்றும்
உரக்க தினம் உரைத்திட்டால்
ஊரெல்லாம் நம்புமென
நம்புகிறார்கள் தினம் சில
நயமான விளம்பர தாரர்கள்!

எழுதியவர் : முரளி (21-Apr-15, 2:09 pm)
பார்வை : 370

மேலே