சமாதியாய் சமத்துவம்

..."" சமாதியாய் சமத்துவம் ""...

இயற்கை நம்மை சீண்டினால்
இனாம்பார்த்து தீண்டவில்லை
இப்புவியினில் நாம் இருப்பதே
இறப்பதற்காகத்தான் என்றால்
இனம்பிரித்ததில் மதம்பிரித்து
இரத்த சுவை காண்பதுமேனோ !!!

அலைந்து திருந்து எங்கு
தேடியும் கிடைக்கவில்லை
கட்டித்தழுவியே உறவாடிய
சமத்துவத்தின் தேகங்களை
காற்றாய்க்கூட உணர்ந்திட
கடுகளவும் கிடைக்கவில்லை !!!

ஒற்றுமையென்றே பேசி
சமத்துவத்தை சாகடித்து
சந்தையிலே கூறுபோட்டு
கூவிக்கூவியே விற்றுவிட்டு
சாக்கடை சகதியில் கைகழுவும்
சாத்தானின் கோட்டையிது !!!

சகோதரத்துவத்தை மதிக்கும்
மனிதமுள்ள மனிதர்களே
மறுக்காமல் வாருங்கள்
மண்ணிட்டு புதைக்கப்பட்ட
சமத்துவத்தை மீட்டெடுத்து
சந்தோசத்தை வாழவைப்போம் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-Apr-15, 2:29 pm)
பார்வை : 48

மேலே