கற்குஞ்சங் கீத சபா
ஆடுஞ் சபையென்றே யாடுகிறாய் அப்பரே
பாடுஞ் சபையென்றே பாடுங்கள் - பாடுங்கல்
நிற்குந்தூண் ஆக்கித்தான் நெல்லையப்பர் நித்தமும்
கற்குஞ்சங் கீத சபா.
நெல்லை தாமிர சபைதானே, சங்கீத சபையா?
எப்படி ?இப்படித்தான்
நெல்லையப்பர் கோவிலின் ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு சப்தம் வரும்
அது ஆன்மீக வாதி தட்டினாலும் வரும் பகுத்தறிவு வாதி தட்டினாலும் வரும்
இசைகருவிகள் கொண்டது தானா சங்கீத சபை...
கற்குஞ்சபை அதாவது கல்லுக்குஞ் சபை கண்டார் நெல்லையப்பர்...
கற்குஞ்சபை-படிக்குஞ்சபை என்றும்பொருள்கொள்க