கவிஞர் பாரதிதாசன் ஜனன தினம்

தமிழுக்கு அமுதென்று
பெயரை போல
கவிஞனே உனக்கு தமிழென்று
பெயர் தான் .
நாவிற்கு தமிழ் சுவையும்
நாசிற்கு தமிழ்மணமும்
செவிகளுக்கு தமிழிசையும்
விழிகளுக்கு தமிழ் உருவமென
உணர வைத்தவன் நீ ..!!
உணர்வில் மட்டுமே நடமாடிய
தமிழை உயிர்மூச்சாக்கிய
உத்தமனே
உச்சரிப்பதில்லை உன் பெயரை
சுப்புரத்னா என
காரணம்
நீ இன்று பார்போற்றும் பாரதிதாசன் ..!!!
நீ ஜனித்தாய் மறைந்தாய்
நாம்
மறக்கவில்லை எம்மில் நீ
மறையவில்லை ..
எமக்குள் வாழ்கின்றாய்
உன்னை
போற்றுகின்றோம் இன்று
தமிழ் அன்னையின் தத்துப் பிள்ளையாய் ..!!!!!
இன்று தமிழோடு கலந்து எனக்குள் உயிருக்கு மேலாய் வாழும் கவிஞர் பாரதி தாசனின் ஜனன தினம் ..!!