மழையென்பது யாதெனின்

வாடி வதங்கி வாழும்
தூதுவனைத் தேடி
மகிழ்ச்சியில் ஆழ்த்தவும் ...

பளீரிடும் மின்னல் அழகியை
கூடி குலாவி மகிழ்வதற்கும் ...

ஊரே கூத்தாடிக் களைக்கும் அந்த
ஆனந்தக் கூத்தை ரசிக்கவும் ...

பட்டுப் பூச்சிகள் வண்டின் இனமோ ரீங்காரமாய் என பயங்கொண்டு
மலர்களோடு அதிசயிக்கும் அழகை ரசித்து மகிழவும்...

ஆகாய மடியில் பாரம் குறைக்கவேண்டி ஆயிரமாயிரம் மணம் பரப்பும் வண்ணப் பூக்கள்
தன்னிடம் தஞ்சம்கொண்டு தவழவும் நுகர்ந்து மகிழவும் ....

வறுமையில் வாடிய ஏழை ஏர்களும் உழவு மாடுகளுக்கும் தன்னைக் கண்டு வணங்கி தாகத்தின் விருந்தாளி என போற்றவும்...

வெந்து நொந்த மண்ணைக் கவ்வவும் தவழவும் கூண்டிலிருக்கும் புழு பட்சி பூச்சிகளெல்லாம் விடுதலைச சிறகுகளை விரித்து பறந்து ஊர்ந்து மகிழவும் ...

உருவமில்லா ஓசைதனை எழுப்பும் புல்லாங்குழலின் நாதத்தின் வழி வந்த மூங்கில்களின் தியாகத்தினை போற்றி மகிழவும்...

வைகறைக்கும் பூமிக்கும் நடக்கும்
நெம்புகோலாக ஆதவன் கைகளுக்கு சந்தனக் காப்பிட்டு மகிழவும் ....

நிமிர்ந்து நின்ற மலைமாது நிறைமாத கர்ப்பிணி போல் நீர்க்குடத்தை உடைத்து மண்ணிற்கு புண்ணியக் குழந்தையைத் தந்து மகிழவும்..

மூச்சிரைக்க மூச்சிரைக்க கரிக்கும் கடல் காதலனுக்கு காதலியின் அன்பு முத்தம் கொடுத்து மகிழவும்...

தாயைக் கண்டதும் தவழ முடியாமல் தவழ்ந்து தாவிப் பிடிக்கும் குழந்தையிடம் பெற்ற முத்தம் போலவும் ...

நம் மண்ணில் குதூகலத்துடன் பணிவாய் மெதுவாய் விரைவாய் வந்து தாகக் கதவைத் திறக்கும் அற்புத ஆனந்தம் மழையே...


அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (1-May-15, 2:30 am)
பார்வை : 81

மேலே