காணாமலும் தெரிகிறாய்
இமைகள் இறுக்கிக் கொண்டு
இரைந்திடும் மழை தாளத்தை
காதுகளால் பருகியபடி
மயங்கி கிடக்கிறேன் ......
உள்ளங்கால்களில் ஊறும் மயிலிறகாய்
உன் நினைவுகள்......
திடுக்கிட்டு திறக்கிறேன் கண்களை....
காற்றெல்லாம் நீ .....
காணாமலும் தெரிகிறாய் .......

