சராலாய் உனை அணைத்திட

__0___0__0__0___0___0___0__)

சிந்தைகள் யாவும் உனது பக்கமாய் குவிய
கடலலை மோதி கரையும் மணலாய்
இரு விழிகளின் தைரியம் இழந்து
உணர்வுகளோடு உயிரினைப் புதைக்கிறேன்

_0__0___0_0___0_0__0__0__0__0__0)

கவி உலகினை சிறு மைத்துளி
மையம் கொள்வது போல
மூச்சுக் காற்றினில் அவன் நினைவுகளை ஏந்திய
பெண்மையின் முன்னிலையில்
நாணமாய் கரங்கள் இரெண்டும் நழுவிச் செல்ல

_0__0___0___0____0__0__0__0___0__0__)

புதுமை காணும் புது யுகம் போல
உறவினைத் தேடும் என் நிழலுக்கு -உன்
பெயர் மட்டுமே உறைவிடமாக நீளுகின்றது
உதட்டோரத்தில் கசியும் தேறலாக

0__0___0___0____0___0___0___0___0___0__)

காய்ந்த நிலத்தில் தோன்றிய பிளவாக நானிருந்தால்
புனலாக அகம் தீண்டாயொ -உனை
அணைக்கும் புழுதியாய் மாறி புன்னகைக்கிறேன்
பிரிவு தரும் காயங்களை மறந்து

எழுதியவர் : கீர்த்தனா (9-May-15, 2:42 pm)
பார்வை : 314

மேலே