அசடு

அதிசயமாய்..இன்று
சுட்டெரிக்கும் அக்னியின்
இடையிலே ..
குளிர்வாய் அடை மழை..!

எங்கிருந்தோ நகர்ந்து வந்த
கருமேகக் கூட்டம்..
எனது ஊரில்..
இப்போது..
மாலை ஆறு மணிபோல்
தெரியும் வானம்
மதியம் ஒரு மணிக்கு!

மழையில் நனைந்தபடி
ஆச்சரியத்தில்
அசையாமல்
நட்ட நடு வீதியில்
நிற்கின்ற மாடு..
அசடோ..
..
நேற்று வரை
தகிக்கும் வெயிலை
கரித்துக் கொட்டிய நான்..
அபோதமாய் ..
ஒரு குடைக்குள்
புகுந்தபடி..
சே.. என்ன மழை..
என்று சொல்லிப்
போவதை பார்க்கின்ற ..
மாடு ..நினைக்கின்றது
இவன் .. அசடோ?

எழுதியவர் : கருணா (13-May-15, 5:16 pm)
Tanglish : asatu
பார்வை : 156

மேலே