என்னோடு நீ இருந்தால்

ஜன்னல் தாண்டி
என்னைத் தீண்டி
சுட்டெழுப்பும் அதிகாலைக்
கதிரவனும் சற்று
கண் பிதுங்கிக் கலங்கி நிற்கும்...

நடைபாதை முட்கள் கூட
என் பாத அதிர்வு கண்டு
பூமிக்குள் புதைந்து கொள்ளும்...

விழும் மழை கூட
என் தலை நனைக்காமல்
விழும்...

பல் நடுங்க வைக்கும்
பனி கூட பாட்டிசைத்து
என்னை உறங்க வைக்கும்...

இவையெல்லாம் நான்
மண்ணோடு போகும் வரை
மனதோடு மலர்ந்திருக்கும்
"என்னோடு நீ இருந்தால்"...


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (17-May-15, 5:44 pm)
Tanglish : ennodu nee irundaal
பார்வை : 665

மேலே