facebook

முகநூலே
நீ நான் முகம் பார்க்கும்
கண்ணாடியாக மாறிவிட்டாய்!

இதுவரை
எனதழகை ரசித்த நான்
இன்று உலகத்தின் அழகாய்
ரசிக்கிறேன் உன்னால்..........

காலையில் பரபரப்பு
போக்குவரத்தில் மட்டும் அல்ல:
உன்னிடத்திலும் தான் .............

ஒரு விஷயம்
பல கருத்துக்கள்
பரவுகின்றது உன்னால்.............

சிந்தனைகள் உன்னால்
சிறகடிக்கின்றன.............

இப்படி பல விசயங்கள் நாள்தோறும்
நானும் பகிர்கின்றேன் உன்னால்..............

இப்படி பகிர்தளுக்காக நீ வந்துள்ளதால்
நீயும் என் தோழி ஆனாய்........

முகம் தெரியாத இதயங்கள்
ஒவ்வொரு நாட்களும் நட்பின்
பரிணாம வளர்ச்சியாக
என் அகத்தில் உன்னால் - முகநூலே !!!!!!

என்றும் பிரியமுடன்
பிரியா ஜோஸ்

எழுதியவர் : (26-May-15, 4:22 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 90

மேலே