மனிதனும் அவன் காதலும்

ஆற்றல் பல உழைத்து
அணுக்கள் மையம் துளைத்து
மாயக் கூட்டில் மயக்கி வைத்தான்
உலகினை....

காணா அலைகளை
அழகு படுத்தினான்
காய்ந்த மரங்களை
மாற்றி பிடித்தான்
அறிவுகள் பலவும் அறவியலாக
அற்புதம் நாளும் படைத்தான்

செல்களின் செறிவில்
உணரும் உணர்வை ஊற்றாக்கினான்

கற்று கொடுத்த காற்றின் மடியில்
சாய்ந்து கொண்டு
விண்ணில் நடக்கும் மாற்றம் உரைத்தான்
சரித்திர நிழலில் நிற்கும் மனிதன்
தன்னுள் ஏற்படும் மாற்றத்தின்
காரணம் கேட்டால்
கண்ணை மூடி தேடுகிறான்
கண்மூடித்தனமாக

எழுதியவர் : த.பிரபாகரன் (27-May-15, 3:44 pm)
பார்வை : 84

மேலே