வாழ்ந்து பார்
![](https://eluthu.com/images/loading.gif)
கனவுகளை புதைத்து விட்டு
நினைவுகளை சுமந்து
முழக் கயிற்றில் உயிர் நீக்கப்போகும்
என் தோழனே....எந் நாட்டு இளைஞனே...,
முயற்சித்துப் பாரடா...
சமுத்திரம் முழங்காலளவுடா..,
வெற்றிடம் எங்கும் இல்லையடா
வெறும் கை முழம்போடாதுடா...,
உழைப்பே உண்ணதமடா...
உலகம் உனை மதிக்குமடா...,
வெற்றி பெற்றவரெல்லாம்
வீழ்ந்து எழுந்தவர்தானடா...,
இயற்கையை நேசி,
காற்றுடன் பேசு
நீருடன் விளையாடு
நெருப்போடு பயப்படு
மண்ணோடு பாசம் வை..
விண்ணோடு சேர்ந்து
மனசை விசாலமாக்கு,
பிறப்பது உண்மையெனில்
இறப்பதும் உண்மையடா..,
வாழ்வது ஒரு முறைதானடா
வாழ்ந்துதான் பாரேண்டா..!
என் தோழனே...
எந் நாட்டு இளைஞனே...!