தாரத்திலும் ஓர் தாய் உன்னால் 555
![](https://eluthu.com/images/loading.gif)
அழகே...
நீ எழுதிய காதல் கடிதம்
என் கைக்கு வந்தது...
வானுக்கு
வளர்ந்துவிட்டேன்...
நீ என்னுடன் நேரில்
வந்து பேசினாய்...
வானுக்கு அப்பால்
மேலும் வளர்ந்துவிட்டேன்...
என் இதயவானில் உல்லாச
பறவையாக வந்தவள் நீ...
உறங்கிவிட்டேன்
நிம்மதியாக நான்...
எனக்கு இன்னொரு தாய் மடி
கிடைத்துவிட்டது என்று...
தாரத்திலும் ஒரு தாய் இருக்கிறாள்
என்பதை உணர்ந்தேன்...
உன்னாலும் உன்
வரவாலும் என் வாழ்வில்.....