உன்னைத் தேடி

சுவையின்றி சுவைக்கும்
நாவினைப் போல்
நீயின்றி திகைக்கும்
நானிங்கே..!!
விழும் பனிப்பொழுதில்
அழும் விழிகளுக்கு
தினம் ஆறுதலுரைக்க
நீயெங்கே..??
கண் பார்வையில்
மட்டும் தொலைந்து
என்னுயிரில் கோர்வையாய்
ஒட்டும் "உன்னைத் தேடி"..
காகிதமும் பேனாவும்
கட்டிக்கொண்டு நான்.
செ.மணி