அன்னையே

அன்புள்ள அன்னையே
மூன்றெழுத்து கவிதையே
பத்து மாதம் சுமந்து
கருவுக்கு உருகொடுத்தாய்
உன் ரத்தத்தை உணவாக்கி
என் உயிர் வளர்த்தாய்
உன் கண்ணிமைக்குள்
எனைக் கைதியக்கினாய்
உன் உறக்கம் விற்று
நான் பரிசுகள் பெற்றேன்
இன்பங்கள் அனைத்தும்
இல்லத்தில் அளித்தாய்
தாயே ! உனக்கு அளிக்க என்னிடம் என்ன இருக்கிறது?
நீ எனக்கு அளித்த உயிரைத் தவிர!
வேண்டும் வேண்டும் ஒரு ஜனனம் உன் வயிற்றில்!!!!

எழுதியவர் : பீமன் (9-Jun-15, 9:43 pm)
சேர்த்தது : பீமன்
Tanglish : annaiyae
பார்வை : 272

புதிய படைப்புகள்

மேலே