முதல் சேதி

அன்பான அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் வாக்கப்பட்டு போன ஆசப்பட்ட
ஒங்க மவ கொளஞ்சி…. எங்கெழக்கால.வூட்டுல இருக்கிற அஞ்சாப்பு படிச்ச அஞ்சல தயவுல எழுதுறேம்.. சேதி.....ஒண்ணு... சொல்லிப்புடுறேன்.....!

ஒங்க சொகத்துக்கு.ஆயா தாத்தா பெரிய சின்ன அண்ணன் அண்ணி. ஒறவுக்காரவுக பஞ்சுமில்லு மாமென் ,மேக்கால ரொட்டிக் கடமச்சான் ,வசந்தா சாந்தா,வாய்க்காக்கர செல்லம்மா, நம்ம வூட்டு செவத்த. சீமப் பசு.லெட்சுமி எல்லாத்துக்கும் சவுகரியம் கேட்டு கடுதாசி.

இங்கன உள்ள. எம் வூட்டுக்காரரு மாமியா நாத்தனா கொழுந்தனா எல்லாருஞ் சொகந்தான் .. வாக்கப்பட்ட வூடு பத்து பாஞ்சு நாளா பழகிட்டுது ஆத்தா..! .நா .மொதல்ல வெசயத்த சொல்லுதென் கேளு. நீங்க எனக்கு செஞ்ச நவ நட்டு பித்தள அண்டா குண்டா எல்லாம் எண்ணி எட போட்டு பாத்த எம் மாமியாவுக்கு காப்பவுனு கொறையுதாம் ..ஆடிக்கிப் போகையில ஆத்தா செஞ்சி போடும்ன்னேன். எம் வூட்டுக்காரருக்கு மோதர வெரலுக்கு மோதரம் போகலயின்னு போடல.தல தீவிளிக்கி நா வாறப்ப தட்டான வுட்டு தட்டித் தருவாகன்னு சொல்லிட்டேன்.சீரு செனத்தி சாமானல்லா சமீன் வூட்டுக் கணக்கால்ல இருக்குன்னு வாழப் பழத்துல ஊசிய ஏத்துறாக ஆத்தா. ஆனாக்க அங்கன ஒலக்க அம்மிக்கொளவி ஆட்டுக்கல்லுன்னு புடிச்ச எங்கையி இங்கன மறந்து போயி நோகாம மிகிசி கிரைண்டருன்னு சுத்திக்கிட்டு கெடக்கு ஆத்தா.

சரி.... அது போவட்டும் ஆத்தா.. ஒடம்ப பத்தரமா பாத்துக்க. அப்பங்கிட்ட திட்டு வாங்காத. நாஞ் சொல்றது செரமமா இருந்தா மனசுக்குள்ள புழுங்கி வெசனப்படாத ஆத்தா.. நம்ம சின்ன அண்ணனுக்கு எந் நாத்தனாவ குடுத்துப்புடலாம். நீங்க மறக்காம திவிளிக்கி நா வாறப்ப சொன்னதச் செஞ்சிருங்க. அம்புட்டுதான் இப்பக்கி. நாம இப்பஞ் செய்யிறத எந் நாத்திகாரிக்கிட்ட வாங்கிப்புடுவம். மித்த சேதி ஒங்க பதிலுலதாம்.

இப்படிக்கி ஒங்க மவ
கொளஞ்சி.

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (10-Jun-15, 11:20 am)
பார்வை : 306

மேலே