varumai

வெளி நாடு போபோறேன் உம்மா
நான் வெளிநாடு போபோறேன்
பாதியிலே வாப்பா போய்ட்டார்
வீதியில நாம
நாலு பொண்ணுங்க
என்ன உம்மா செய்ய போறீங்க
ராத்தாக்கும் வயசு 30 ஆகுது
freeya ஒருவனும் வரமாட்டான்
சரியா? உம்மா
நான் சொல்லுறன் கேளுங்கோ
நான் போறேன் .....
ஏஜென்ட் இரண்டு லச்சம்
காசு தருவான்
அவளுக்கு மாப்புள பாருங்கோ
மஹர் கொடுத்து மாப்புள.....
பெண் எடுக்கணும்
இப்போ
காசு கொடுத்து
மாப்புள நாம வாங்கணும் .
எல்லாமே மாறிபோச்சு
இரண்டு வருஷம் கழிச்சு
நான் வருவன்,
இன்னொரு மாப்புள வாங்க மத்தவளுக்கு

எழுதியவர் : subuhan (10-Jun-15, 6:00 pm)
சேர்த்தது : சுபுஹன்
பார்வை : 59

மேலே