எண்ணம் என்ற ஏணி - 12262

கவனத்தை குவித்து விட்டால்
காரியத்தில் வென்றி உண்டு

கலக்கமின்றி செயல் பட்டால்
காலம் என்பது பூச்செண்டு

பயந்து சாக வாழ்க்கை இல்லை
பாய்ந்து நீந்த அந்த வானம்....!

ஓய்ந்து ஒடுங்க நாமும் இல்லை
ஒரு கை பார்ப்போம் சவால்கள் ஜாலி...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (12-Jun-15, 12:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 82

மேலே